Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டில் ஆர்த்தியிடம் வசமாக மாட்டிக்கொண்டு திணறும் ஜூலி - ப்ரொமோ

பிக்பாஸ் வீட்டில் ஆர்த்தியிடம் வசமாக மாட்டிக்கொண்டு திணறும் ஜூலி - ப்ரொமோ
, புதன், 30 ஆகஸ்ட் 2017 (12:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்ததிலிருந்து நிகழ்ச்சி கலைடட்ட தொடங்கி விட்டது.  பிக்பாஸ் கட்டளைப்படி, வீட்டிற்குள் இருப்பவர்கள் என்.ஆர்.ஐ குடும்பம், மதுரை குடும்பம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் ஜுலி, ஆர்த்தி, காஜல், ஆரவ் என அமர்ந்துள்ள நிலையில், காஜல் ஆரவ்  கண்ண பார்த்தா ஏதோ குறுகுறுன்னு பன்னுதுனு காயத்ரி கிட்ட போய் சொன்னியே என்றார். பதில் கூறிய ஜீலி மறுநாளே  ஆரவ்-வை பார்த்த போது எனக்கு அப்பா ஃபீலிங் வருதுன்னு சொல்ல, இதை கேட்டு கொண்டிருந்த  ஆர்த்தி அய்யய்யோ..!  நம்மளால முடியாது பா..! காயத்ரி கிட்ட லவ் பண்றேன் னு சொன்னியே அது ரகசியமாகவே இருந்ததா என்று கமல் சார் கேட்டாரே ஞாபகம் இருக்கா..? என்று ஜூலியிடம் தடாலடியாக ஒரு கேள்வியை கேட்கிறார் ஆர்த்தி.
 
நீ யாருன்னு எனக்கு தெரியும். ஏன் ஊருக்கே தெரியும் என்று கூறுகிறார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் காயத்ரி இருந்தபோது  ஆரவ்வை பார்க்கும் போது ஏதோ செய்கிறது என்று காயத்ரியிடம் கூறியிருப்பார். அதனை மீண்டும் வீட்டில் நுழைந்த ஆர்த்தி  பேசுகிறார். இதனால் ஜுலி மற்றும் ஆர்த்தி இடையே சூடான வாக்குவாதம் நடக்கிறது. இதனால் ஆர்த்தியிடம் வசமாக  மாட்டிகொண்டார் ஜூலி. என்ன நடக்கபோகிறது என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் கிரிக்கெட்டைப் படமாக எடுக்கும் ‘நெருப்புடா’ அருண்ராஜா காமராஜ்