Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 ஏக்கரில் பிரமாண்ட பண்ணை வீடு கட்டும் ராஜமெளலி!

100 ஏக்கரில் பிரமாண்ட பண்ணை வீடு கட்டும் ராஜமெளலி!
, புதன், 7 ஜூன் 2017 (17:54 IST)
இயக்குனர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி ரூ.1600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பாகுபலி படத்தை பிரம்மாண்டமாக கொடுத்த இயக்குனர் ராஜமௌலி, தற்போது சுமார் 100 ஏக்கரில் பார்ம் ஹவுஸ் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



ஐதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ., தொலைவில் இந்த  பண்ணை வீடு அமையயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து ஆர்ட் டைரக்டர் ரவீந்தரை பிளான் வடிவமைக்க, அதை ராஜமெளலியும் ஒகே செய்துள்ளார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வீட்டை சுற்றி மரங்கள், செடிகள், தவிர, மிகப்பெரிய பிரமாண்டமான கார் பார்க்கிங் வசதியும் இங்கு அமைக்கப்படவுள்ளது.
 
தவிர, இந்த வீட்டின் உள்ளேயே கிரிக்கெட் மைதானம், வாலிபால் உள்ளிட்ட பல மைதனங்களும் தனித்தனியாக எல்லா  வசதுகளுடன் அமைக்கப்படவுள்ளது. இதில் இவரது குடும்பத்தினர் நிம்மதியாக பொழுதுபோக்க ஏராளமான விஷயங்களுடன் வடிவமைக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நமீதாவுடன் ஜோடி போடும் உதயநிதி ஸ்டாலின்...