Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: 2நாள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து

Advertiesment
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: 2நாள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (10:54 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை சாதனைகளை பாராட்டும் வகையில், ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளையும் (2-ந்தேதி) நாளை மறுநாளும் கலைவிழா நடைபெற உள்ளது.  தயாரிப்பாளர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை  செய்துள்ளது.


 
இளையராஜா 75  நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பல்வேறு நடிகர் நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.
 
நடிகைகள்இனியா, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், பூர்ணா, ரூபினி, சுனைனா, மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, வேதிகா, சாயிஷா, உள்பட பலர் நடனம் ஆடுகிறார்கள். ரோபோ சங்கர், யோகிபாபு, சதீஷ், கோவை சரளா ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந்தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடக்கிறது.
 
விழாவையொட்டி 2 (நாளை) மற்றும் 3-ந்தேதிகளில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழுக்குதான் புதுவரவு! ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 2 மலையாள நடிகைகள்