Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த பாடல் சிறப்பாக வர உன் மாமனார்தான் காரணம்… தனுஷிடம் ரஜினி பற்றி பேசிய இளையராஜா!

இந்த பாடல் சிறப்பாக வர உன் மாமனார்தான் காரணம்… தனுஷிடம் ரஜினி பற்றி பேசிய இளையராஜா!
, சனி, 19 மார்ச் 2022 (16:14 IST)
நேற்று நடந்த இளையராஜாவின் ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இப்போது முன்புபோல பிஸியான இசையமைப்பாளராக  இருக்கும் இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் ராக்வித் ராஜா என்ற பெயரில் லைவ் கான்செர்ட் நேற்று சென்னை தீவுத்திடலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் அதிகமாக கவனம் ஈர்த்தது நடிகர் தனுஷ் தனது இரு மகன்களுடன் வந்து கலந்துகொண்டது.  இந்த கச்சேரியின் போது ரஜினி நடித்த வள்ளி படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே பாடல் பாடப்பட்டது. அந்த பாடலின் நினைவலைகளைப் பற்றி பேசிய இளையராஜா தனுஷைப் பார்த்து எழுந்து நிற்க சொல்லி ‘இந்த பாடல் சிறப்பாக அமைய உன் மாமனார்தான் காரணம் தனுஷ். ரஜினிகாந்த் ரசனையோடு, காட்சியின் சூழ்நிலையை கூறியதால்தான் பாடல் சிறப்பாக வந்தது’ எனக் கூறினார். அதைக் கேட்டு தனுஷ் புன்னகைத்தார். சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியால் நிற்கும் விடுதலை ஷூட்டிங்!