Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் உனை நீங்கமாட்டேன், நீங்கினால்..” – தீடீர்னு இளையராஜா பாடிய பாட்டு- வைரல் டிவீட்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (09:48 IST)
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய நிலையில் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து சர்ச்சைகளைக் கிளப்பின.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வந்தனர். இந்த சர்ச்சை குறித்து பேசிய இளையராஜா, தான் தன் மனதில் பட்டதை பேசியுள்ளதாகவும், அதை திரும்ப பெறப்போவதில்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வந்தன. இந்நிலையில் தற்போது இளையராஜாவின் ஒரு டிவீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த டிவீட்டில் தளபதி படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் சில வரிகளைப் பாடி பகிர்ந்துள்ளார் இளையராஜா. சமீபத்தைய சர்ச்சைகளை அடுத்து இப்போது இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments