Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்ஃபொனி என்பதை யாரும் விளக்கமுடியாது… அதை உணரவேண்டும் – இளையராஜா கருத்து!

Advertiesment
Ilaiyaraja first symphony

vinoth

, சனி, 1 பிப்ரவரி 2025 (07:35 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். இது இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விரைவில் இந்த சிம்பொனி இசை கச்சேரி லண்டனில் உள்ள ஒரு இசையரங்கில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது இளையராஜா தன்னுடைய முதல் சிம்ஃபொனி இசை குறித்து நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார். அதில் சிம்ஃபொனி என்றால் என்னவென்று விளக்கிக் கூறுங்கள் என்ற கேள்விக்கு “சிம்ஃபொனியை யாரும் விளக்கிக் கூற முடியாது. அதை உணர்ந்து அனுபவிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!