Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அடிபணிந்து இருக்க நினைத்தால் நாய்க்குட்டியை வளர்க்கலாம்’ - அமலாபாலுக்காக கொந்தளித்த நடிகை

Advertiesment
மம்தா மோகன்தாஸ்
, திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (08:49 IST)
பெண்கள் தங்களுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று யாரேனும் கருதினால் அவர்கள் நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாம் என்று நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.
 

 
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் டைரக்டர் விஜய்யும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் விவாகரத்து வழக்கு தொடர தயாராகி வருகிறார்கள்.
 
இந்நிலையில் இது கருத்து கருத்து தெரிவித்துள்ள நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியதாவது, "ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மனைவியான பிறகு குடும்பத்தை பார்க்க வேண்டும், கணவரை கவனிக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்கள் வருகிறது.
 
கணவன்மார்கள், நடிகைகள் தனக்கு உணவு சமைத்து, துணிகளை துவைத்து குடும்ப வேலைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் திருப்தி ஏற்பட்டால்தான் வேலைக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றைய நடிகைகள் தங்களுக்கு பாதுகாப்பின்மை இருப்பது போன்று உணர்கிறார்கள்.
 
பெண்கள் தங்களுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று யாரேனும் கருதினால் அவர்கள் நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாம்" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருந்தாத சிம்பு: மீண்டும் ஒரு சர்ச்சை பாடல்