Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், அஜித்துக்கு நண்பனா நடிக்க விரும்பினேன்: சிவகார்த்திகேயன்

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (22:57 IST)
விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன் ஒருகாலத்தில் சினிமாவில் நுழையும்போது விஜய், அஜித்தின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக நடித்தாலே போதும் என்ற எண்ணத்துடன் சினிமாவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.



 
 
சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், ' டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோவாகும் எண்ணம் எல்லாம் இல்லை. விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக நடித்தாலே போதும் என்றுதான் நினைத்தேன். ஆனால் எனக்கு கிடைத்த டீம் நல்ல டீமாக இருந்தது. பாண்டியராஜ், தனுஷ் ஆகியோர் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து என்னை ஹீரோவாக்கினார்கள்
 
இவங்கள மாதிரியானவங்க கொடுத்த நம்பிக்கையில் தான் இன்று ஹீரோவாக உள்ளேன். இப்போது யார் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தாலும் இவர் சிவகார்த்திகேயன் போல வந்துடுவார் என்று கூறும்போது மகிழ்ச்சியாக உள்ளது' என்று சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசினார்.
 
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துபவர்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார்கள். அதுபோல் அனைவரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துங்கள், முன்னேறுங்கள். வெற்றிக்கு முக்கிய காரணம், யார் பேச்சையும் கேட்காதீங்க. உங்க மனசுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்கள்' என்று அவர் மேலும் இந்த விழாவில் பேசினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்த ஸ்மிருதி இரானியின் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி..!

இன்று பூஜையோடு தொடங்கும் ‘கார்த்தி 29’ படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இயக்குனராகும் ரத்னகுமார்… ஹீரோவாக ‘ரெட்ரோ’ வில்லன்!

காடன் படத்தில் என் கதாபாத்திரம் துண்டிக்கப்பட்டது… பிரபு சாலமனிடம் இப்போது வரை பேசவில்லை –விஷ்ணு விஷால் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments