Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட சாக்ஷி , சோகத்தில் மூழ்கிய காதலன்!

Advertiesment
Bigg boss 3
, வியாழன், 18 ஜூலை 2019 (13:11 IST)
கவின் , சேரனை அடுத்து தற்போது சாக்ஷி , மீராமிதுன் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் இருவரும் தற்போது ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சாக்ஷி ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் கவின் சோகத்தில் மூழகியுள்ளார். 
 
இதனை அறிந்த லொஸ்லியா ஜெயிலுக்குள் இருக்கும் சாக்ஷியிடம் " தயவுசெய்து எனக்காக ரெண்டுபேரும் நல்லா இருக்குங்க, நான் எவ்வளவு நாள் இங்கு இருப்பேன்னு தெரியாது, ஆனால் நான் இருக்குறவரைக்கும் பார்க்கமுடியாது நீங்கள் இப்படி இருக்கிறதை, .கவினும் இதை நினைத்து ரொம்ப பீல் பண்ணினான் என்று கூற, உடனே சாக்ஷி நீ பீல் பண்றதுக்கு ஒண்ணுமில்லை, நீ எனக்கு நடுவில் வருவது போன்று நான் எதுவும் நினைக்கவில்லை என கூறுகிறார்.
 
பின்னர் லொஸ்லியா,  எனக்கு அவனை பிடிக்கும் ஆனால் அது லவ் இல்லை என தெளிவாக விளக்குகிறார். உடனே பிஜிஎம் மியூசிக் "கனவே கனவே கலைவதேனோ" என்று இசைக்க கவின் காதலியை பிரிந்த சோகத்தில் இருக்கிறார். 
 
இதனை கண்ட ரசிகர்கள் 2 நாள் வந்த இந்த காதலை வெளியே போன உடனே மறந்திடப்போறீங்க இதுக்கு எதுக்கு இவ்ளோவ் சீன் என திட்டி வருகின்றனர். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியை பிரிந்து கதறிய கவின்? ஆறுதல் கூறிய லொஸ்லியா - வீடியோ!