Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“சஞ்சய் ராமசாமியைப் பார்த்து வழிஞ்சிருக்கேன்” - கீர்த்தி சுரேஷ்

Advertiesment
“சஞ்சய் ராமசாமியைப் பார்த்து வழிஞ்சிருக்கேன்” - கீர்த்தி சுரேஷ்
, வெள்ளி, 5 ஜனவரி 2018 (10:56 IST)
‘சஞ்சய் ராமசாமியைப் பார்த்து வழிஞ்சிருக்கேன்’ என கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத்  இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கீர்த்தி சுரேஷ், “எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதருக்கும் நன்றி. ஹீரோயினுக்காக சில ஸ்பெஷல் விஷயங்களைக் கதையில் சேர்த்துள்ளார் இயக்குநர். 80களின் இறுதியில் நடப்பது போல இந்தக்கதை  அமைக்கப்பட்டுள்ளது.
 
சஞ்சய் ராமசாமியைப் பார்த்து நான் வழிஞ்சிருக்கேன். ஆனா, இப்போ அவருக்கு ஜோடியாவே நடிச்சிருக்கேன். சூர்யாவுடன் நடிக்க மிகப்பெரிய ஸ்பேஸ் கொடுத்ததுக்கு அவருக்கு நன்றி” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலேசியாவுக்குப் பறந்த ரஜினி, விஜய்