Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி கதையில் சிம்பு வந்தது எப்படி? சுவாரஸ்ய தகவல்!

Advertiesment
ரஜினி கதையில் சிம்பு வந்தது எப்படி? சுவாரஸ்ய தகவல்!
, செவ்வாய், 21 மார்ச் 2023 (09:24 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தேசிங்  பெரியசாமி கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி ‘தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார்.

இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. ரஜினி, அடுத்தடுத்து வேறு வேறு இயக்குனர்களோடு படம் பண்ணிவருகிறார். இந்நிலையில் ரஜினிக்காக தான் எழுதிய கதையைதான் இப்போது சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ரஜினிக்காக எழுதிய கதை அதிக பட்ஜெட் காரணமாக நிராகரிக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த கதையில் இடம்பெற்ற பிரம்மாண்டமான பிளாஷ் பேக் காட்சிகளை நீக்கிவிட்டு, சிம்புவுக்காக சில மாற்றங்களை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ட்ரண்டிங் துர்கா’… லேட்டஸ்ட் அப்டேட்!