Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிருடன் இருப்பவர் வேடத்தில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்

உயிருடன் இருப்பவர் வேடத்தில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்
, புதன், 7 ஜூன் 2017 (12:31 IST)
கணிதவியல் வல்லுநரான பீகாரைச் சேர்ந்த ஆனந்த் குமார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.


 

 
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் கணிதவியல் வல்லுநர் ஆனந்த் குமார். ஐஐடியில் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், ‘சூப்பர் 30’ என்ற புரோகிராமை உருவாக்கியவர். இந்த புரோகிராமுக்காக, அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா முதற்கொண்டு பலரிடமும் பாராட்டு பெற்றவர். 44 வயதேயான இவருடைய வாழ்க்கை வரலாறு, படமாக எடுக்கப்பட இருக்கிறது.

webdunia

 

 
தன்னுடைய ‘காபில்’ படத்துக்குப் பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருந்த ஹிருத்திக் ரோஷன், ஆனந்த் குமார் வேடத்தில் நடிக்கப் போகிறார். விகாஸ் பால் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஜூலை மாதம் தொடங்குகிறது. கல்லூரி மாணவர் மற்றும் பேராசியர் என இரண்டு தோற்றங்களில் நடிக்கப் போகிறார் ஹிருத்திக். கல்லூரி மாணவர் வேடத்துக்காக தற்போது எடையைக் குறைத்துவரும் ஹிருத்திக், ஐஐடி பேராசிரியர் வேடத்துக்காக எடை கூடுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் ‘அறம்’ பாடல்களை வாங்கிய இசை நிறுவனம்