Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபார்மெட்களை உடைத்து கடைசி உலகப்போர் படம் எடுத்துள்ளேன்… லாபம் வந்தால்?- ஹிப்ஹாப் ஆதி கருத்து!

ஃபார்மெட்களை உடைத்து கடைசி உலகப்போர் படம் எடுத்துள்ளேன்… லாபம் வந்தால்?- ஹிப்ஹாப் ஆதி கருத்து!

vinoth

, புதன், 18 செப்டம்பர் 2024 (07:27 IST)
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த முதல் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தை இவரே இயக்கி, நடித்தும் இருந்தார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தவர் நீண்ட காலம் படம் நடிக்காமல் இருந்து, பின்னர் சமீபத்தில் ‘பிடி சார்’ என்ற அவருடைய படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் இயக்குனர் பொறுப்பை கையில் எடுத்துள்ளார் . தானே எழுதி இயக்கி நடிக்கும் தனது அடுத்த படத்திற்கு ‘கடைசி உலகப்போர்’ என பெயரிட்டுள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையமைத்து தயாரித்தும் உள்ளார்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆதி, “இதுவரை நான் சினிமாவில் சம்பாதித்த அனைத்தையும் போட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தில் இருந்து லாபம் கிடைத்தால் மீண்டும் அதை வைத்து படம் எடுப்பேன். ஏனென்றால் என்னுடைய ஃபார்மட்டை உடைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன்.  கொஞ்சம் ரிஸ்க் ஆன படம்.” எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?