Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவனின் தோற்றத்தால் கதை கூட கேட்காமல் துரத்திய நடிகை - பின்னர் அந்த நடிகையே...

செல்வராகவனின் தோற்றத்தால் கதை கூட கேட்காமல் துரத்திய நடிகை - பின்னர் அந்த நடிகையே...
, திங்கள், 25 மே 2020 (20:35 IST)
சினிமாவை நேசிக்கும் வெற்றி இயக்குனராக செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி , யாரடி நீ மோகினி , மயக்கம் என்ன உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். சமீபத்தில் அவர் வளர்ந்து வந்த பாதை குறித்து 14 வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உருக்கமான கடிதம் எழுதியிருந்தார்.

அதில், டியர் செல்வா (14 வயது ) இந்த உலகம் உன்னை ஊனமுற்றவன் , கண் இல்லாதவன் என்பதால் உன் உருவத்தைப் பார்த்து சிரித்தது. நீ எங்கு சென்றாலும் மக்கள் உன்னையே முறைத்துப் பார்க்கிறார்கள் அல்லது கேலி செய்கிறார்கள். ஒவ்வொரு இரவும் நீ அதைப் நினைத்து அழுகிறாய். சில நேரங்களில் கடவுளிடம் "ஏன் என்னை மட்டும் இப்படி படைத்தாய்? ஏன்?
என கேள்வி கேட்கிறாய்.

அப்போது, செல்வா கவலைப்பட வேண்டாம். சரியாக 10 ஆண்டுகளில் நீங்கள் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை எழுதி இயக்குவாய். அது உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றும். உன்னை பார்த்து சிரித்த அதே உலகம் இந்த முறை மரியாதையுடனும் போற்றுதலுடனும் பார்க்கும். அடுத்த பத்து ஆண்டுகளில் நீங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் உனக்கென தனி பாதை அமைத்து கிளாசிகளாக திரைப்படங்களை உருவாக்குவாய். மக்கள் உன்னை "மேதை" என்று அழைப்பார்கள். இப்போது அவ்ர்கள் உங்களைப் பார்க்கும்போது நீ உருவாக்கிய படங்களின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய மனிதரை பார்ப்பார்கள்.

எனவே அன்புள்ள பையன். தைரியமாக இருக்க. கடவுள் உங்களிடமிருந்து விலைமதிப்பற்ற ஒன்றை எடுத்துக் கொண்டால், அதை அவர் உங்களிடம் ஏராளமாகக் கொடுப்பார். எனவே உற்சாகமாக இரு. புகைப்படங்கள் எடுக்கும் போது புன்னகை செய் . நீ சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை எப்பொழுதும் பார்த்ததில்லை. ஏனெனில் பின்னாட்களில் உன்னை அதிகம் புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருக்கும். உன்னை நேசி. இயக்குநர் செல்வராகவன் (வயது 45) என்று தான் வாழ்க்கையையும் அது கற்றுக்கொடுத்த பாடத்தையும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தது அனைவரையும் உருக்குலைத்தது.

webdunia

இந்நிலையில் தற்போது நடிகை வைஜெயந்தி மாலாவின் மகனிடம் கதை சொல்ல அவரது வீட்டிற்கு சென்றபோது அந்த நடிகை செல்வராகவனின் தோற்றத்தை பார்த்து வெளியில் துரத்தி விட்டாராம். பின்னர் சில வருடங்கள் கழித்து செல்வராகவனின் திறமை உணர்ந்து அவரே என் மகனை சினிமாவில் உன் படத்தின் மூலம் அறிமுகம் செய்து வை என கேட்டபோது அதை செல்வராகவன் மறுத்துவிட்டாராம். பிரபல யூடியூப் விமர்சகர் கூறிய இந்த விஷயம் வைரலாக பேசப்பட்டு வந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவ ஷேப்பு அப்பப்பப்பா... ரேஷ்மா போட்டோவை ரசித்து தள்ளும் இணையவாசிகள்!