Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய சினிமாவின் மகன் அவர்…குருவைப் புகழ்ந்த கமல்ஹாசன்…

Advertiesment
இந்திய சினிமாவின் மகன் அவர்…குருவைப் புகழ்ந்த கமல்ஹாசன்…
, வியாழன், 9 ஜூலை 2020 (15:21 IST)
நீர்க்குமிழி என்ற படத்தில் இயக்குநரான அறிமுகமான  இயக்குநர் கே.பாலச்சந்தர் அடுத்ததுத்து தான் இயக்கிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் இயக்குநர் சிகரம் என அழைக்கப்படுகிறார். இவரது 90 ஆவது பிறந்த தினம் இன்று.இவர், தேசிய விருதுகளையும், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றவர்.

இந்நிலையில், கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தை நிர்வகித்து வரும் அவரது மகள் புஷ்பா கந்தசாமி இன்று காலையில் ஒரு டுவீட் பதிவிட்டிருந்தார். அதில், மேடை தோறும் குரு புகழ் முழங்கும் அன்பு மாணாக்கன் இவரால் அவரா அவரால் இவரா எவரும் அறியா அதிசயம் அவர்களுள் புதைந்த ரகசியம் . உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் உயர்ந்த பதிவு என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் பல பெரிய புகழ்களைக் கொண்ட சிறிய பெயர். அவர் பல வேடங்களை ஏற்ற  ஒரு கொடையாளார், தந்தையாகவும் இருந்தவர். குழந்தையைப் போல் சுறுசுறுப்பானர். என் தந்தையின் சிறப்பை உணர்கிறேன். அவர் இந்திய சினிமாவின் மகன் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பேரும், புகழுடன் இருக்க காரணம் அவர் தான் - குருவுக்கு நடிகர் ரஜினி புகழாரம்