ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (11:51 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராகப வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். ஆனால் அவரின் கடைசி ஆண்டுகளில் அவருக்கு அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை. அதனால்  ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடி வந்தார். அதன் பின்னர் அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்து தற்போது கிரிக்கெட் விமர்சகராகவும், வர்ணனையாளராகவும் பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தன்னுடையக் கிரிக்கெட் வாழ்வில் தான் மாற்ற விரும்பும் விஷயம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “என் கிரிக்கெட் வாழ்க்கையில் பின்னோக்கி சென்று நான் எதையாவது மாற்ற விரும்புகிறேன் என்றால் ஐபிஎல் தொடரில் நான் ஸ்ரீசாந்துடன் மோதிய சம்பவத்தைதான். அதற்காக நான் 200 முறைக்கு மேல் மன்னிப்புக் கேட்டிருப்பேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஸ்ரீசாந்தின் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவள் என்னிடம் “நான் உங்களுடன் பேசமாட்டேன். நீங்கள் தானே எங்கள் அப்பாவை அடித்தது” என்றாள். அது என் மனதை நொறுக்கிவிட்டது” என வருத்தம் தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரான்ஸின் உயரிய 'செவாலியர்' விருது: தமிழ் திரையுலக பிரபலத்திற்கு அறிவிப்பு!

செம கடுப்புல எழுதுன ரவிமோகனின் அந்த பாடல்.. பாட்டு எந்தளவு ஹிட் தெரியுமா?

முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments