Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழை அடுத்து ஹிந்தியில் கால் பதிக்கும் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (17:33 IST)
தமிழ் சினிமா நடிகர்களில் தற்போது மிகவும் பிஸியாக இருப்பவர்களில் ஜி.வி.பிரகாஸும் ஒருவர். அடுத்தடுத்து 'சர்வம் தாளமயம்', 'ஐங்கரன்', '4ஜி', 'அடங்காதே', 'குப்பத்துராஜா', 'செம', '100% காதல்' என அவரது கால்ஷீட்டில் பல படங்கள் காத்திருப்பில் உள்ளன. அடுத்த 2019 டிசம்பர் வரை ஜி.வி.பிரகாஷிடம்  வேறு படங்களில் நடிப்பதற்குத் தேதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அவரை இந்தி படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். 
 
பாலா இயக்கியத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், அவரின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் "உங்களுக்கு  ஏற்ற கதை ஒன்று வைத்திருப்பதாக கூறி, இந்திக்கு வாருங்கள் சேர்ந்து பணியாற்றலாம்" என்று அழைத்திருக்கிறார். 
 
"இப்போது தமிழில் நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு பாலிவுட் வருகிறேன்" என்று ஜி.வி.பிரகாஷும் அனுராக் காஷ்யப்புக்கு  பதில் கூறியதாக கூறப்படுகிறது. இந்தியில் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments