Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளம் மீண்டு வர துணைநிற்போம்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு..!

Siva
புதன், 31 ஜூலை 2024 (15:56 IST)
கேரள மாநிலம் வயநாடு அருகே மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் 170 க்கும் மேற்பட்டோர் உயி இழந்த நிலையில் ஏராளமான நபர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் மற்றும் மீட்பு படையினர் இரவு பகலாக அந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் திரை உலக பிரபலங்கள் பலர் இந்த நிகழ்வுக்கு தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கமல்ஹாசன், விஜய் உள்ப சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் கேரளம் மீண்டு வர துணை நிற்போம் என்று பதிவு செய்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது

வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணைநிற்போம்

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments