Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்குமார்

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்குமார்
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:18 IST)
ஜி வி பிரகாஷ் மிக இளம் வயதில் இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகி தரமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பின்னர் இவர் நடிகராகவும் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து
கொண்டார்.


திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களுக்கு பாடல் பாடிக்கொடுப்பது, இசையமைப்பது என இருவரும் கேரியரில் பிசியாக இருந்து வந்தனர். இந்த ஜோடியின் காம்போவில் உருவான அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான். கடைசியாக அசுரன் படத்தில் இடம்பெற்ற "எள்ளு வய பூக்கலையே" என்ற பாடல் ஜிவி இசையில் சைந்தவி தன் காந்தம் போன்ற குரலால் அனைவரையும் ஈர்த்துவிட்டார். இதற்கிடையில் அண்மையில் தான் இந்த தம்பதிக்கு அன்வி என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது.
webdunia

இந்நிலையில் ஜிவி பிரகாஷ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், மனைவி சைந்தவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவருடன் நான் டூயட் ஆடுவதா? கவுண்டமணியை அவமானப்படுத்திய நடிகை!