Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 வருடங்களுக்கு பிறகு கவுதமி செய்ய போவது என்ன?

14 வருடங்களுக்கு பிறகு கவுதமி செய்ய போவது என்ன?
, வியாழன், 5 ஜனவரி 2017 (17:37 IST)
உலக நாயகனை பிரிந்த பிறகு கவுதமி மீண்டும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். தனது மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக்க முயற்சி செய்து வருகிறார்.


 
 
இந்நிலையில் கவுதமி மலையாள படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 14 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்கிறார்.
 
கவுதமி கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் பி.டி. குஞ்சு முகமது இயக்கும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் மாடர்ன் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
மலையாள படத்தில் கவுதமி பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். மன்சூராக நடிக்கும் ஹீரோ ரோஷன் மேத்யூவுக்கு அம்மாவாக நடிக்கிறார் கவுதமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் பாடல்கள் வெளியீடு