Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறம் 2 படத்தை கைவிட்ட கோபி நயினார்: காரணம் என்ன?

அறம் 2 படத்தை கைவிட்ட கோபி நயினார்: காரணம் என்ன?
, புதன், 7 மார்ச் 2018 (18:10 IST)
நடிகை நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பார்த்தது. 
 
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் தொடர்ச்சியாக அறம் 2 இயக்கப்படும் என்ற செய்திகள் வெளியானது. இதில் நயன்தாராவே நடிப்பதாவும் கூறப்பட்டது. 
 
ஆனால், கோபி நயினர் அடுத்த அறம் படத்தை இயக்க போவதில்லை என தெரிவித்துள்ளார். இது குரித்து மேலும் அவர் கூறியதாவது, என்னுடைய அடுத்த படம் பற்றி வெளியாகும்  தகவல்கள் எதுவும் உண்மை கிடையாது. 
 
எனது அடுத்து படம் நிச்சயம் அறம் படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. ஆனால், அறம் போலவே சமூகக் கருத்துகள் நிறைந்த படத்தைத்தான் இயக்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 
இதன் மூலம் கோபி நயினார் தற்போதைக்கு அறம் 2 படத்தை கைவிட்டுள்ளார். ஆனால், எப்படியும் அறம் 2 ஆம் பாகம் எடுக்கப்படக்கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவுக்கு வரும் மணப்பெண் ஒரு ஆபாச பட நடிகையா?