Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறு தணிக்கைக்கு செல்லும் அட்லீ படம்?

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (15:12 IST)
அட்லீ தயாரித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகின்றனர்.

 
 
அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. கமலிடம் உதவியாளராகப்  பணியாற்றியுள்ள ஐசக், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜீவா – ஸ்ரீதிவ்யா இருவரும் ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை, வருகிற 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருந்தனர்.
 
இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. யு சான்றிதழ் கிடைக்காததால், எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.
 
இன்னொரு பக்கம், ‘பாகுபலி-2’ இன்னும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். எனவே, படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகிறார்கள். அல்லது குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments