Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறு தணிக்கைக்கு செல்லும் அட்லீ படம்?

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (15:12 IST)
அட்லீ தயாரித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகின்றனர்.

 
 
அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. கமலிடம் உதவியாளராகப்  பணியாற்றியுள்ள ஐசக், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜீவா – ஸ்ரீதிவ்யா இருவரும் ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை, வருகிற 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருந்தனர்.
 
இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. யு சான்றிதழ் கிடைக்காததால், எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.
 
இன்னொரு பக்கம், ‘பாகுபலி-2’ இன்னும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். எனவே, படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகிறார்கள். அல்லது குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments