Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் நான்கு நாட்கள்தான்… வேதனைக்கு அர்த்தம் கிடைக்கப் போகிறது – செல்வராகவன் மனைவி டிவீட்!

இன்னும் நான்கு நாட்கள்தான்… வேதனைக்கு அர்த்தம் கிடைக்கப் போகிறது – செல்வராகவன் மனைவி டிவீட்!
, திங்கள், 4 ஜனவரி 2021 (16:56 IST)
இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தனது மூன்றாவது பிரசவம் குறித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இன்றைய இளம் இயக்குனர்களில் முக்கியமான திரைப்படங்களை மிக் இளம்வயதிலேயே இயக்கி முன்னணி இயக்குனர்களாலேயே பாரட்டப்படுபவர் செல்வராகவன். அது மட்டுமில்லாமல் தன்னுடைய தம்பியை ஒரு முன்னணி ஹீரோவாகவும் உருவாக்கியுள்ளார். இவருக்கு நடிகை சோனியா அகர்வாலுடன் திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதையடுத்து தன்னுடைய உதவியாளராக கீதாஞ்சலியை செல்வராகவன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே லீலாவதி மற்றும் ஓம்கர் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது கீதாஞ்சலில் மீண்டும் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் இப்போது ‘கவுண்ட்டன் ஆரம்பமாகிறது. இன்னும் நான்கு நாட்களே. ஆர்வமாகி உள்ளேன். தூக்கமில்லா இரவுகள் மற்றும் தூங்கி வழிந்த பகல்கள்… வேதனைகள் மற்றும் வலிகளுக்கு விடை கிடைக்க போகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து மகிழ்ச்சி. ’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு ஆரம்பிக்க உள்ள ட்ரஸ்ட்… அட பேரு இதுதானா?