Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடலின் உரிமை இருப்பவர்களிடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம்- இளையராஜாவுக்கு GBU தயாரிப்பாளர் பதில்!

vinoth
புதன், 16 ஏப்ரல் 2025 (14:51 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படம் விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டும் என்றும் மேலும் 250 கோடி ரூபாய்க்கு மேலாக திரையரங்குகள் மூலமாக எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது, இந்த படத்தில் முக்கியமான இடங்களில் பழைய பாடல்களை ஓடவிட்டு கூஸ்பம்ப் கொடுத்தது. ஆனால் இந்த படத்தில் தன் மூன்று பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதற்காக நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனம் “அந்த பாடல்களின் உரிமை யாரிடம் உள்ளதோ, அவர்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுதான் பாடல்களை பயன்படுத்தினோம்” என்று விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments