Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்து தல படத்தின் ஷூட்டிங் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:23 IST)
பத்து தல படக்குழுவினர் சிம்புவின் வருகைக்காக சில மாதங்களாக காத்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கியது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படமாக்கப்பட்டு வந்தன. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கரும், கவிஞர் மனுஷ்யபுத்திரனும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து இப்போது கர்நாடக படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டியொ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments