Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் இயக்கும் அடுத்த பட்த்தின் முதல் சிங்கிள்... ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

Advertiesment
தனுஷ் இயக்கும் அடுத்த பட்த்தின் முதல் சிங்கிள்... ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

vinoth

, சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:29 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில் இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் மீண்டும் சென்னையில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், “சீக்கிரமாகவே NEEk சிங்கிள் விட்ருவோமா?... முதல் சிங்கிள் மிக்ஸிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  2கே ஜென் ஆல்பம் ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா நடிக்கும் கங்குவா பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு