Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷோடு உட்கார்ந்தால் ஐந்து நிமிடத்தில் பாடல் முடிந்துவிடும்- ஜி வி பிரகாஷ்!

vinoth
சனி, 30 மார்ச் 2024 (14:12 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் –ஐ இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில்  தனுஷ் அடுத்து  ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஜி வி பிரகாஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனராம். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அவர்கள் இந்த பாடலில் நடித்துள்ளதாக, அந்த பாடலை படத்தின் ப்ரமோஷனுக்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பாடல்கள் பற்றி பேசியுள்ள ஜி வி பிரகாஷ் “இயக்குனர் தனுஷுடன் கம்போசிங்குக்கு உட்கார்ந்தால் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் மெட்டு உருவாகிவிடும். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. அதில் எந்த பாடலை முதலில் ரிலீஸ் செய்வது என்று ஆலோசித்து வருகிறோம். ஒரு பாடலில் நான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments