Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்காதே திரைப்படத்துக்கு 190 கட்டாம்… அடிமடியில் கைவைத்த சென்ஸார்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (18:31 IST)
ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள அடங்காதே திரைப்படம் சென்சாரில் சிக்கி 190 கட்கள் செய்ய சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளாராம்.


அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இரு மாறுபட்ட தோற்றங்களில் உருவாகி  வரும் 'அடங்காதே' எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்று. ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி, காவல் விசாரணை  அதிகாரியாக மந்த்ரா பேடி, சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படம் சென்சாருக்கு சென்ற போது படத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனக் கூறி ரிவைசிங்குக்கு பெங்களூருக்கு அனுப்பியுள்ளனர். அங்கே படம் பார்த்த அதிகாரிகள் படத்துக்கு 190 இடங்களில் கட் சொல்லியுள்ளனராம். அதற்கு சம்மதிக்கா விட்டால் படத்துக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவித்துள்ளனராம். ஏற்கனவே ஆண்டி இண்டியன் திரைப்படத்துக்கும் இதுபோல தடை விதிக்கப்பட்டு அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments