வட சென்னை படத்திலிருந்து விலகியதையடுத்து அந்த வேடத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்னை குடிசைவாழ் பெண்ணாக வடசென்னையில் அவர் நடிக்கிறார்.
இந்த வேடத்துக்காக அவர் சென்னை பாஷையை பயிற்சி செய்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட உள்ளன. மூன்று பாகங்களாக தயாராகும் வடசென்னையில் அமலா பால் மூன்று பாகங்களிலும் நடிக்க உள்ளார்.
வடசென்னை படத்துக்காக மத்திய சிறைச்சாலை போன்று அரங்கு அமைத்து அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தார் வெற்றிமாறன். லைக்காவும், தனுஷின் வுண்டர்பாரும் இணைந்து வடசென்னையை தயாரிக்கின்றன.