Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசோக்செல்வனின் அடுத்த படத்தில் 4 நாயகிகள்!

அசோக்செல்வனின் அடுத்த படத்தில் 4 நாயகிகள்!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:57 IST)
தமிழ் நடிகர் அசோக்செல்வன் நடிக்கவிருக்கும் அடுத்த திரை படத்தில் நான்கு நாயகிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அசோக் செல்வன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் என்பவர் இயக்கவிருக்கிறார் என்பதும் இந்த படத்தையும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷித்மிகா மற்றும் ஸ்வேதா ஆகிய நான்கு நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும் நான்கு பேருக்கும் இந்த படத்தின் கதையில் முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த படத்தின் டைட்டில்லுக்  பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டைலிஷ் உடையில் கெத்து காட்டும் பாவனா - லேட்டஸ்ட் போட்டோஸ்!