Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 200 கோடி வசூலைக் கடந்த ‘மெர்சல்’

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:27 IST)
தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படம், 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.


 


விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படம், தீபாவளி தினத்தன்று ரிலீஸானது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில், எந்தப் படமும் செய்யாத சாதனையை ‘மெர்சல்’ படம் செய்திருக்கிறது என்கிறார்கள். ரஜினி நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படம்தான் அதிகம் வசூலித்து முதலிடத்தில் உள்ள தமிழ்ப் படம். 280 கோடி ரூபாயை அந்தப் படம் வசூலித்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலானதுதான் இந்தத் தொகை.

ஆனால், படம் வெளியான 12 நாட்களிலேயே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது ‘மெர்சல்’. நேற்றுவரை உலகம் முழுவதும் இந்தத் தொகையை வசூலித்துள்ளது. இப்படியே போனால் ‘எந்திரன்’ சாதனையை முறியடித்துவிடும் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments