Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவில் சூழந்த வெள்ளம்.... பிரபல நடிகர்கள் நிதி உதவி...

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (20:30 IST)
தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ளக்  காடாக நீர் சூழ்ந்துள்ளது,.

இந்த வெள்ளநீரால் பலபேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த மழையில் சில இடங்களில் வீடுகள் இடித்து விழுந்தன. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர்  உயிரிழந்துள்ளனர்.ரூ. 5000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக மக்களின் சார்பில் ரூ.10 கோடி நிதி உதவி அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறித்தார்.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்துள்ளார். மேலும் இதற்கு உதவும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி ரூ1 கோடி நிதி உதவியும், நடிகர்கள் நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ. 50 லட்சம் உதவி யும், செய்துள்ள்ளனர். நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ. 10 லட்சம் நிதி உதவியும் என் முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்.

நிதிஉதவி செய்த அனைத்து நடிகர்களுக்கும் முதல்வர் சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சூரியின் கருடன் படத்தின் டிரைலர் & ஆடியோ லான்ச் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

5 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹரிஷ் கல்யாணின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

ரிலீஸுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ‘கொட்டுக்காளி’

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments