Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைகளுக்கு எதிரான போதைப்பொருள் வழக்கு...நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் !

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (20:25 IST)
கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில்  சிறையில் உள்ள நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகை ராகினி திவேதி வீட்டில் திடீரென போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை தொடர்ந்து ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரஞ்சனா கல்ராணி கைது செய்யட்டு இருவரும் பெங்களூர் அக்ரஹார  சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில்  சிறையில் உள்ள நடிகைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கலாணி ஆகியோரை உடனடியாக ஜாமீனில் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி பெங்களூரி ஏற்பட்ட கலவரத்தில் கைதாகியவர்களையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இல்லையெனில் காரை வெடி வைப்போம் என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து நீதிபதி சீனப்பா பெங்களூர் போலிஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடிகை ராகினி திவேதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments