Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கானாவில் சூழந்த வெள்ளம்.... பிரபல நடிகர்கள் நிதி உதவி...

தெலுங்கானாவில் சூழந்த வெள்ளம்.... பிரபல நடிகர்கள் நிதி உதவி...
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (20:30 IST)
தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ளக்  காடாக நீர் சூழ்ந்துள்ளது,.

இந்த வெள்ளநீரால் பலபேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த மழையில் சில இடங்களில் வீடுகள் இடித்து விழுந்தன. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர்  உயிரிழந்துள்ளனர்.ரூ. 5000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக மக்களின் சார்பில் ரூ.10 கோடி நிதி உதவி அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறித்தார்.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்துள்ளார். மேலும் இதற்கு உதவும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி ரூ1 கோடி நிதி உதவியும், நடிகர்கள் நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ. 50 லட்சம் உதவி யும், செய்துள்ள்ளனர். நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ. 10 லட்சம் நிதி உதவியும் என் முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்.

நிதிஉதவி செய்த அனைத்து நடிகர்களுக்கும் முதல்வர் சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகைகளுக்கு எதிரான போதைப்பொருள் வழக்கு...நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் !