Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீடிவி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் தீவிபத்து: அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (08:30 IST)
ஜீடிவி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் தீவிபத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் சமீபத்தில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றான ஜீடிவியில் ஒளிபரப்பாகும் இந்தி தொடரான ’கும்கும் பாக்யா’ என்ற தொடரின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது. இந்த தொடரின் படப்பிடிப்புக்காக முக்கிய நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது திடீரென இந்த படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள செட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த தொடரில் நடித்த நடித்து வந்த நடிகர் நடிகைகள் அவசர அவசரமாக ஸ்டூடியோவை விட்டு வெளியேறினார்கள்.
 
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னணி சின்ன தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments