Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்ஃபி எடுக்க ரஜினி பின்னால் ஓடிய ரசிகர்களால் பரபரப்பு

rajini-jailer
, வெள்ளி, 28 ஜூலை 2023 (14:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் உருவாகிய ’ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 3 வது சிங்கில் நேற்று  முன்தினம்  வெளியானது. இப்படத்தில் புரமோசன் பணிகள் நடந்து வருகிறது.

இதையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார்.  இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள்  நடந்து வருகிறது,

இந்த நிலையில் ஜெயிலர் மற்றும் லால் சலாம் பட ஷூட்டிங் முடிந்த பின்னர்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலத்தீவு சென்றார். அவர் படகின் மூலம் மாலத்தீவு சென்று இறங்கியதும் அங்கு மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த  நிலையில், மாலத்தீவு சுற்றுப் பயணம் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். அத்துடன், ரஜினி கார் ஏறச் சென்றபோது அவரை துரத்திச் சென்று செல்பி முயன்றனர். உடனே அவரது பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட நடிகை அவதூறு பதிவிட்ட நபருக்கு வக்கீல் நோட்டீஸ்