Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷேக்ஸ்பியர் நாடகத்தை தழுவி உருவாகும் படம்!... மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

ஷேக்ஸ்பியர் நாடகத்தை தழுவி உருவாகும் படம்!... மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி
, சனி, 3 அக்டோபர் 2020 (16:04 IST)
இயக்குனர் திலிஷ் போத்தனும் பஹத் பாசிலும் மூன்றாவது முறையாக ஜோஜி என்ற படத்தில் இணைய உள்ளனர்.

இயக்குனர் திலேஷ் போத்தன் அறிமுகமான முதல் படமான மகேஷிண்ட பிரதிகாரம், மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களுக்கே மிகவும் பிடித்த படமாக அமைந்து திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது. அதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்த தொண்டிமுதலும் திருச்ஷாட்சியும் திரைப்படமும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

இதையடுத்து இப்போது இருவரும் மீண்டும் இணைந்து ஜோஜி என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படம் ஷேக்ஸ்பியரின் நாடகமான மெக்பத்தின் ஒரு பகுதியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இணையத்தில் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரகாஷ் ராஜின் சவாலை ஏற்ற திரிஷா… டிவிட்டரில் வெளியான புகைப்படம்!