Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது பிந்துதான்; உறுதியாக சொல்லும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது பிந்துதான்; உறுதியாக சொல்லும் நெட்டிசன்கள்
, வியாழன், 28 செப்டம்பர் 2017 (15:14 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் 5 பேர் மட்டுமே உள்ளனர். 100 நாள் இறுதி போட்டியில்  4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். எனவே வாரத்தின் மத்தியில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என ஏற்கனவே பிக்பாஸ்  கூறியிருந்தார். இந்நிலையில் இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும்  ஆவலாக இருக்கின்றனர்.

 
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்து ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வீடியோவில் 5 போட்டியாளர்களும் உள்ளனர். அதில் ஆரவ் பெட்டியுடன் செல்கிறார். இதனை பார்த்த பார்வையாளர்கள்  குழப்பத்தில் உள்ளனர். ஆரவ் கையில் இருப்பது அவருடைய பெட்டியா? அல்லது பிந்து மற்றும் ஹரிஷ் பெட்டியா? என்பது  தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிந்து மாதவிதான் சோகத்துடன் உள்ளார். எனவே பிந்து மாதவி வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்காக ஆரவ் பிந்து மாதவியின் பெட்டியை எடுத்து சென்றிருக்கலாம் எனவும்  கூறப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிநேகனுக்கு எதிராக களம் இறங்கிய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்