Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காரைக்குடிக்கு டாடா சொன்ன சூர்யா படக்குழ்… அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட்!

காரைக்குடிக்கு டாடா சொன்ன சூர்யா படக்குழ்… அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட்!
, புதன், 1 செப்டம்பர் 2021 (16:58 IST)
சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலமாக காரைக்குடியில் நடந்து வந்தது.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியானது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காரைக்குடியில் முகாமிட்டு படத்தின் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. இப்போது அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளது. அதோடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்கு சென்ற அருண் விஜய்!