Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் இணையும் ஈரம் படக் கூட்டணி… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

மீண்டும் இணையும் ஈரம் படக் கூட்டணி… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
, ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:42 IST)
ஈரம் திரைப்படத்துக்கு பிறகு இப்போது ஆதி மற்றும் இயக்குனர் அறிவழகன் மீண்டும் இணைய உள்ளனர்.

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையில் அவர் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவழகன் மீண்டும் ஆதி நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படமும் ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரம் என்ற வெற்றிப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை ஏமாற்றிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்…முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?