அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், காயடு லோஹர், மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த டிராகன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை கண்ட இந்த படத்தில், நாயகிகளில் ஒருவராக நடித்த காயடு லோஹர், தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அஷ்வத் மாரிமுத்து முதல் முறையாக Zoom கால் மூலம் கதையை சொல்லிக் கொடுத்த தருணம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அந்த நேரத்தில், அவர் எனக்கு கீர்த்தி கதாபாத்திரத்தைக் கூறினார். அந்த ரோல் மிகவும் ஆழமானது, பலத்த உந்துதலை தரும் ஒரு கதாபாத்திரம் என உணர்ந்தேன். ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வராததால், அந்த வாய்ப்பு எனக்கு இல்லை என்று எண்ணி வருந்தினேன்.
ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் அஷ்வத் என்னை தொடர்பு கொண்டு, இந்த முறை பல்லவி கதையை சொல்லினார். அவர் கதை முடிக்கும்போது, என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. ஏன் கீர்த்தி இல்லை? ஏன் பல்லவி? என்ற குழப்பம்." அந்த சந்தேகத்துக்கு பதிலளிக்கும்படி, அஷ்வத் கூறிய பதில் என்னை ஆழமாக பாதித்தது.
"இது இரண்டு நாயகிகளுக்கான படம். இதில் ஒன்று மற்றொன்றை விட முக்கியமானது என்று நினைக்காதே. நான் உன்னை, பல்லவியை மக்கள் காதலிக்கும்படி உருவாக்குவேன். இதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் உண்மையாகி விட்டன.
அவர் எனக்குக் கொடுத்த பல்லவி கதாபாத்திரம் என் மனதில் பெருமை அளிக்கிறது. இரண்டாவது முறையாக கதையை கேட்டதும், பல்லவியின் தனித்துவத்தை உணர்ந்ததும், இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய சந்தோஷமாக உணர்ந்தேன்."
"நன்றி, அஷ்வத்! பல்லவியை எனக்கு அளித்ததற்கும், எனக்காக சிறப்பு முயற்சி செய்து, மிகச்சிறந்த அறிமுகத்தை வழங்கியதற்கும், உங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதற்கும்... இது ஒரு நடிகையின் மீது உள்ள அன்பையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. இதை நான் என்றும் மறக்க மாட்டேன்," என்று காயடு லோஹர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.