Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘டோரா’ படத்திற்கு தணிக்கை கவலையில் படகுழுவினர்!

‘டோரா’ படத்திற்கு தணிக்கை கவலையில் படகுழுவினர்!
, புதன், 22 மார்ச் 2017 (17:09 IST)
அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான 'டோரா' படத்தின் தணிக்கை சான்றிதழை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகவிருக்கும்  இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் திகில் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறி படத்துக்கு 'ஏ' சான்றிதழ்  வழங்கியுள்ளனர்.
 
விவேக் சிவா மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார் ஒன்றுக்கு முக்கிய கதாப்பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இப்படத்தின் டீசர், டிரைலர், இசை ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு  நயன்தாரா நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் 'டோரா' ஆகும்.
 
இதையடுத்து படக்குழுவினர் மீண்டும் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யூ சான்றிதழுடனோ அல்லது யூ/ஏ சான்றிதழுடனோ வெளிவருமா என்பது விரைவில் தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.0 படப்பிடிப்பில் செய்தியாளர் மீது தாக்குதல்; வருத்தம் தெரிவித்த ஷங்கர்