Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட ஈடு வழக்கு: ரைசா மருத்துவர் வக்கீல் நோட்டீஸ்

மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட ஈடு வழக்கு: ரைசா மருத்துவர் வக்கீல் நோட்டீஸ்
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:19 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பேஸியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்குஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் 
 
இந்த நோட்டீசுக்கு தற்போது பதிலளித்துள்ள மருத்துவர் பைரவி, ‘சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக ரைசா வில்சன் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதில் அனுப்பியுள்ளார். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஒரு கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேலும் தன்னுடைய நற்பெயரை சீர்குலைக்க ரைசா முயற்சிப்பதாகவும் பைரவி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னா மயிலு: கவினின் ‘லிப்ட்’ பட பாடலை வெளியிட்ட அனிருத்!