Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

vinoth

, வியாழன், 16 மே 2024 (08:24 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

அதையடுத்து பொன் ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் மற்றும் DSP ஆகிய இரு படங்களும் படுதோல்வி படங்களாக அமைந்தன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் இப்போது தயங்குகின்றனர். அதனால் அவர் அடுத்த படத்தை வளர்ந்து வரும் இளம் நடிகரான சண்முக பாண்டியனை வைத்து இயக்க தயாராகி வருகிறார்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து தற்போது முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் பட ஷூட்டிங் இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அதில் நடித்து முடித்ததும் இந்த படம் தொடங்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?