Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாக்காரர்கள் தவறு செய்தால் தேசத்துரோகிகள் போல பேசுகிறார்கள்… இயக்குனர் பேரரசு காட்டம்!

vinoth
செவ்வாய், 8 ஜூலை 2025 (13:47 IST)
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சமீபத்து கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.

ஸ்ரீகாந்த் மூலமாக கிருஷ்ணாவும் போதைப் பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமாக மேலும் பலர் திரையுலகில் போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் சிலரோ தமிழ் சினிமாவில் பெரும்பாலானவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு இதுபற்றி பேசும்போது “சினிமாக்காரர்கள் போதை பொருள் பயன்படுத்தி மாட்டினால் தேசத் துரோகம் செய்தது போல காட்டுகின்றனர். சமூகவலைதளங்களில் இருக்கும் நிறைய மிருகங்கள் வன்மத்தைக் கொட்டுகிறார்கள்.” என கோபமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!

பவன் கல்யாண் படத்தால் நடந்த மாற்றம்… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments