Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘என் கதை புடிக்கலங்குறத ரஜினி சார் இப்படிதான் சொன்னார்….’ இயக்குனர் பாண்டிராஜ்

‘என் கதை புடிக்கலங்குறத ரஜினி சார் இப்படிதான் சொன்னார்….’ இயக்குனர் பாண்டிராஜ்
, புதன், 14 செப்டம்பர் 2022 (15:07 IST)
இயக்குனர் பாண்டிராஜ் சூர்யாவை வைத்து இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

இதையடுத்து தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ள அவர் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “நான் ரஜினி சாருக்கு கதை சொன்னேன். அவரும் முழுவதும் கேட்டார். படத்தில் நிறைய இரவுக் காட்சிகள் இருந்தன. அதனால் கதை நமக்கு செட் ஆகாது என்று கூறிவிட்டார். கதை பிடிக்கவில்லை என்பதை அப்படிதானே சொல்வார்கள்” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யுடன் செல்பி: ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரல்!