Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நண்பருக்காக ரிஸ்க் எடுத்து கொரோனா வார்டுக்கு சென்ற இயக்குனர் லிங்குசாமி!

நண்பருக்காக ரிஸ்க் எடுத்து கொரோனா வார்டுக்கு சென்ற இயக்குனர் லிங்குசாமி!
, சனி, 8 மே 2021 (15:23 IST)
இயக்குனர் லிங்குசாமி தனது நண்பர் வசந்தபாலனைப் பார்க்க கொரோனா வார்டுக்கே சென்றுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்களின் மூலம் முத்திரைப் பதித்தவர். அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்போது அவர் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதை சமூகவலைதளப் பக்கம் மூலமாக அறிவித்தார்.

உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே வசந்தபாலனும் லிங்குசாமியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக வார்டில் தனிமைப்படுத்தப்ப்ட்டு இருந்த வசந்தபாலனைப் பார்ப்பதற்காக லிங்குசாமி மருத்துவர்கள் அணியும் கொரோனா கவச உடையை அணிந்து வார்டுக்கே சென்று அவரைப் பார்த்து வந்துள்ளாராம். முன்னதாக மருத்துவர்கள் அவரின் முடிவை நிராகரித்தபோதும் பிடிவாதமாக சென்று பார்த்து வந்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேற வழியில்ல… மஹா ரிலீஸ் முடிவை எடுத்த படக்குழு!