Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகையை கடத்திய கார்த்திக் சுப்புராஜ்?: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

நடிகையை கடத்திய கார்த்திக் சுப்புராஜ்?: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!

நடிகையை கடத்திய கார்த்திக் சுப்புராஜ்?: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!
, செவ்வாய், 9 மே 2017 (12:31 IST)
இறைவி படத்திற்கு பின்னர் எந்த படமும் எடுக்காமல் இருந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார்.


 
 
இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்த ஹெக்டே என்ற நடிகையை நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கன்னட தயாரிப்பாளர் பத்மநாபனுக்கு சிக்கல் வந்துள்ளதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
சில தினங்களுக்கு முன்னர் சம்யுக்த ஹெக்டேவை ஹீரோயினாக வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் பத்மநாபன் பிரமாண்டமான விழாவுடன் படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால் கேமிராவை ஆன் செய்த பின்னர் தான் தெரியும் ஹீரோயின் சம்யுக்த ஹெக்டேவை காணும், அவர் சென்னைக்கு சென்று விட்டார் என்று.
 
இதற்கு காரணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் என்கிறார்கள். நடுவில் சில தினங்களுக்கு முன்னர் இந்த நடிகையை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், தான் இயக்க இருக்கும் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தால் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிடலாம். இரண்டே படங்களில் கோடிகளில் சம்பளம் வாங்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி சென்னைக்கு வர வைத்து விட்டாராம்.
 
யாரிடமும் சொல்லாமல் நடிகை சம்யுக்தா சென்னைக்கு ஓடிவந்ததை அறிந்த தயாரிப்பாளர் பத்மநாபன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து சென்னையில் இருக்கும் நடிகர் சங்கத்திலும், கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் அவர்.
 
இதனையடுத்து தயாரிப்பாளர் பத்மநாபனை சந்திக்க வருபவர்கள் உங்க பட ஹீரோயினை இயக்குநர் ஒருவர் கடத்திட்டாராமே என வெளிப்படையாகவே பேசுகிறார்களாம். இது குறித்து கேட்க நடிகை சம்யுக்தாவுக்கு போன் அடித்தாலும் சரி, கார்த்திக் சுப்புராஜுக்கு போன் அடித்தாலும் சரி இருவருமே போனை எடுப்பதில்லையாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ டீம்