Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறேன்… எதிர்காலத்தில்” இயக்குனர் ஹரி பகிர்ந்த தகவல்!

Advertiesment
அருண் விஜய்
, வெள்ளி, 8 ஜூலை 2022 (16:10 IST)
அருண் விஜய் மற்றும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி கூட்டணியில் உருவான யானை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ‘யானை’  1500 திரைகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வார இறுதி நாட்களில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய யானை திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை தமிழ் நாட்டில் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் ரிலீஸூக்குப் பின்னர் எந்தவொரு தமிழ்ப் படமும் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் யானை திரைபடம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இயக்குனர் ஹரி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ஹரி “நடிகர் விஜய்யை சில முறை சந்தித்து சில கதைகளை சொல்லியுள்ளேன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விக்ரமுக்கு என்ன ஆச்சு? பி.ஆர்.ஓ விளக்கம்!