Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்றாவது முறையாக இணையும் இயக்குனர் ஹரி & விஷால்… ஷூட்டிங் எப்போது?

மூன்றாவது முறையாக இணையும் இயக்குனர் ஹரி & விஷால்… ஷூட்டிங் எப்போது?
, வியாழன், 15 ஜூன் 2023 (11:10 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது. இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும் ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

அதனால் திரைத்துறையில் அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் ரிலீஸாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்தபடத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் ஜூலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதற்குள் விஷால் மார்க் ஆண்டனி படத்தை முடித்துவிட்டு வருவார் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழு திரைக்கதையும் கொடுத்த வினோத்… கமல் சொன்ன கரெக்‌ஷன்...!